
மும்பை, ஜூலை 7: கிரிக்கெட் உலகத்திற்கு மிகவும் வருத்தமான செய்தி வந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாபூர் ஜாதரான் செவ்வாய்க்கிழமை நீண்ட நோயால் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் 38 வயதாக இருந்தார்.
ஜாதரான் ஹீமோஃபேகோசைட்டிக் லிம்போஹிஸ்டியோசைட்டோசிஸ் (HLH) என்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தாக்கம் செலுத்தும் ஒரு ஆபத்தான நோயாகும். கடந்த சில மாதங்களாக அவர் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஜாதரான் முதலில் கடந்த அக்டோபரில் நோயால் பாதிக்கப்பட்டார், அப்போது ஆப்கானிஸ்தானின் மருத்தவர்கள் அவருக்கு இந்தியாவிற்கு சிகிச்சைக்காக வருமாறு அறிவுரை வழங்கினர். ஆரம்பத்தில் அவருக்கு சிகிச்சை நல்ல முறையில் நடந்தது, ஆனால் 20 நாட்களுக்கு பிறகு, அவரது நிலை மீண்டும் மோசமாகிவிட்டது. அதன்பின் அவர் மருத்துவமனியில் சேர்க்கப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) ஜாதரானின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. ACB சமூக ஊடகங்களில், “அவரது முழு வாழ்க்கையில், ஷாபூர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மரியாதை, துணிச்சல் மற்றும் பெருமையுடன் சேவை செய்தார். அவரது பங்களிப்பு மற்றும் சாதனைகள் எப்போதும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றின் முக்கிய பகுதியாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளது.
மேலும், “கிரிக்கெட் மைதானத்தில் அவரது சாதனைகள் தவிர, ஷாபூர் ஜாதரான் பல இளம் ஆப்கானி கிரிக்கெட் வீரர்களுக்கும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஊக்கம் அளித்தார். அவரது போராட்டம், உறுதியான மனம் மற்றும் விளையாட்டிற்கான காதல் பலருக்கு நம்பிக்கையை அளித்தது” எனவும் கூறப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று பிறந்த ஷாபூர், புதன்கிழமை தனது 39வது பிறந்த நாளை கொண்டாடவிருந்தார்.
இவர் 2009 முதல் 2020 வரை ஆப்கானிஸ்தானுக்காக 44 ஒருநாள் மற்றும் 36 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாளில் 43 மற்றும் T20 இல் 37 விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார்.













Leave a Reply