Tamil DailyKiran

Latest Tamil News – Breaking News Today, Live News, World

சீன ரயில்வே, ஜனவரி முதல் மே வரை 1.9 பில்லியன் பயணிகளை சேவையளித்தது

சீன ரயில்வே, ஜனவரி முதல் மே வரை 1.9 பில்லியன் பயணிகளை சேவையளித்தது

பீஜிங், ஜூன் 13: இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை, சீன ரயில்வே 1 பில்லியன் 96 கோடி 90 லட்சம் பயணிகளைப் போக்குவரத்து சேவைக்கு வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 5.7 சதவீதம் அதிகமாகும். இது வரலாற்றில் இதே காலத்திற்கான மிக உயர்ந்த அளவாகும்.

குறிப்பாக, மே 1 அன்று 2 கோடி 48 லட்சம் 44 ஆயிரம் பயணிகள் போக்குவரத்து செய்யப்பட்டனர். இது ஒரே நாளில் புதிய பதிவாகும். எல்லை கடந்து பயணிகள் போக்குவரத்தில் தொடர்ந்து செயலில் உள்ளது. சீன-லாவோஸ் ரயில்வே மற்றும் குவாங்சோ-ஷான்சன்-ஹாங்காங் உயர் வேக ரயில்வே மூலம் எல்லை கடந்து பயணிகள் எண்ணிக்கையில் முறையே 35 சதவீதம் மற்றும் 14.5 சதவீதம் அதிகரிப்பு காணப்பட்டது.

ரயில்வே துறை, சேவைகளை மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதில் சுற்றுலா சிறப்பு ரயில்கள், அமைதியான வண்டிகள், செல்லப்பிராணிகளை கொண்டு செல்லும் சேவைகள் போன்றவை அடங்கும். மேலும், தேசிய கொள்கைகளுடன் இணைந்து வெளிநாட்டு பயணிகளின் பயணத்தை எளிதாக்கப்பட்டது.

(சாபாரா- சீனா மீடியா குழு, பீஜிங்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *