
பேஜிங், ஆகஸ்ட் 30: சீனாவின் சீட்ஸாங் சுயாட்சி மாகாணத்தில் உள்ள சீலோங் கவுண்டியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கான மீட்பு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 30 ஆகஸ்டு அன்று, சீலோங் கவுண்டியில் ஒரு செய்தி கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலச்சரிவுக்குப் பிறகு, சீட்ஸாங் சுயாட்சி மாகாணம் உடனடியாக இயற்கை பேரிடலுக்கான முதல் நிலை அவசர நடவடிக்கைகளை தொடங்கியது. மாகாணத்தின் நகராட்சி, அவசர மீட்பு கட்டுப்பாட்டு மையம் மற்றும் முன்னணி கட்டுப்பாட்டு நிலையங்களை நிறுவியுள்ளது.
இதற்குப் பிறகு, நிதி அமைச்சகம் மற்றும் அவசர மேலாண்மை அமைச்சகம் 12 கோடி யுவான் அவசர நிதியை வெளியிட்டது. தேசிய வளர்ச்சி மற்றும் சீரமைப்பு ஆணையம், பேரிடர் மீட்பு மற்றும் பேரிடருக்குப் பிறகு அவசர மீட்பு பணிகளை ஆதரிக்க 10 கோடி யுவான் ஒதுக்கியது.
தகவலின்படி, தற்போது படையினர், ஆயுதப்படை, தீயணைப்பு குழு, எல்லை பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு மற்றும் சீன ஆணாங்க கட்டுமான குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் 2,141 மீட்பு பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 269 மீட்பு வாகனங்கள் மற்றும் 3,922 செட் மீட்பு உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
29 ஆகஸ்ட் மாலை 6 மணிக்கு நிலச்சரிவில் 16 பேர் உயிரிழந்ததாகவும், 546 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(சாபாரா- சீனா ஊடக குழு, பேஜிங்)













Leave a Reply