
பீஜிங், ஆகஸ்ட் 3: இந்த வருடத்தின் கோடை காலத்தில் ‘சைனா கூல்’ என்ற சொல் வெளிநாட்டு சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது. பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கோடை வெப்பத்தைத் தடுக்க சீனாவிற்கு வருகிறார்கள். உள்ளூர் சுற்றுலாவின் ஈர்ப்பு அதிகரிக்கிறது.
இதற்காக, சீனாவின் பல பகுதிகளில் உள்ள சுற்றுலா தளங்கள், தங்களின் தனித்துவமான சுற்றுலா வளங்களால் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கின்றன. உதாரணமாக, ஹுனான் மாகாணத்தின் சாங்சியாசே, அழகான இயற்கை காட்சி, குளிர்ந்த வானிலை மற்றும் கண்ணாடி பாலம், ராக் கிளைம்பிங் மற்றும் ஜிப் லைன் போன்ற பலவகை வெளிப்புற செயல்பாடுகளால், சாங்சியாசே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பிரபலமான தேர்வாக மாறியுள்ளது.
எண்ணிக்கைகள் படி, ஜூலையில் சாங்சியாசே கிராண்ட் கானியன் சுற்றுலா தளத்தில் பயணிகளின் சராசரி தினசரி எண்ணிக்கை சுமார் 10,000 ஆக உள்ளது, இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வீதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு வசதியாக, சுற்றுலா தளத்தில் 14 மொழிகளில் நேரடி உரையாடலை ஆதரிக்கும் பலமொழி ஏஐ முகவர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் ஷின்சியாங் உய்கூர் சுயாட்சி மாகாணத்தில் உள்ள உள்ளூர் கலாச்சாரம் தனித்துவமானது. கோடை விடுமுறைகளில், காஷ்கர் பழைய நகரம் சுற்றுலா தளத்தில் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. சில கலாச்சார மரபு கைவினை பணியாளர்கள் மற்றும் கடைகள், பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளன.
(சாபார – சீனா மீடியா குழு, பீஜிங்)
–
எபிஎம்/














Leave a Reply